×

செம்மொழி செம்மல் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

கூடலூர்,மார்ச்12: கூடலூர் கல்வி மாவட்டம் ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.வி. வாசுதேவன் தனது 25 விருதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளில் சூரியன் விடியல் விருதுகள், மற்றும் மொழி செம்மல் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகால கல்வி பணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. விருது பெற்ற தலைமை ஆசிரியரை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED மழையால் வனப்பகுதியில் வறட்சி நீங்கியது